பீளமேடு பகுதியில் வீட்டில் புகுந்து கத்தியைக்காட்டி மிரட்டி செல் போன் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மேத்திவ். இவரது மகன் ஜஸ்டின் (19). கடந்த செவ்வாயன்று முகவரி விசாரிப்பதுபோல் இவரது வீட்டிற்கு வந்த மூன்று வாலிபர்கள் ஜஸ்டின் தனியாக இருந்ததை அறிந்து கத்தியைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வீட்டில் இருந்த 3 செல்போன்களை அந்த வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கோவை என்.எச். சாலை பகுதியைச் சேர்ந்த ரத்துல், ரோஷன், குட்டி ஆகிய மூவரும் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ரோஷனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரத்துல் மற்றும் குட்டியை தேடி வருகின்றனர்.
கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் மேத்திவ். இவரது மகன் ஜஸ்டின் (19). கடந்த செவ்வாயன்று முகவரி விசாரிப்பதுபோல் இவரது வீட்டிற்கு வந்த மூன்று வாலிபர்கள் ஜஸ்டின் தனியாக இருந்ததை அறிந்து கத்தியைக் காட்டி மிரட்டி திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வீட்டில் இருந்த 3 செல்போன்களை அந்த வாலிபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பீளமேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மூவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இதில், இந்த கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டது கோவை என்.எச். சாலை பகுதியைச் சேர்ந்த ரத்துல், ரோஷன், குட்டி ஆகிய மூவரும் என தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, ரோஷனை காவல் துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ரத்துல் மற்றும் குட்டியை தேடி வருகின்றனர்.