உக்கிரமான சண்டை காரணமாக மொசூல் நகரில் இருந்து 900 பேர் தப்பி ஓட்டம்

ஈராக் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்று மொசூல். இந்த நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பிடியில் உள்ளது. அவர்களிடம் இருந்து இந்த நகரத்தை மீட்பதற்காக கடந்த திங்கட்கிழமை முதல் அமெரிக்க கூட்டுப்படைகளின் ஆதரவுடன் ஈராக் படைகள் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன.

இதன் காரணமாக அந்த நகரத்தில் உக்கிரமான சண்டை மூண்டுள்ளது.

அந்த நகரத்தில் இருந்து சுமார் 900 பொதுமக்கள் தப்பி, சிரியாவுக்குள் நுழைந்து விட்டதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு கூறுகிறது. அப்படி சிரியாவில் நுழைந்தவர்கள், அங்கு அகதிகள் முகாம்களில் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது மொசூல் நகரில் 15 லட்சம் மக்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வது முக்கியம் என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.

இதற்கிடையே மொசூல் நகரில் இருந்து மேலும் பொதுமக்கள் தப்பி ஓட முடியாதபடிக்கு அவர்களை ஐ.எஸ். பயங்கரவாதிகள் தடுப்பதாகவும், அவர்களை மனித கேடயமாக பயன்படுத்த முயல்வதாகவும் கூறப்படுகிறது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...