பெரிய தடாகம் பகுதியில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பெண் காட்டு யானை வனத்துறையினரின் சிகிச்சைக்குப் பின் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது.
கோவை மாவட்டம் பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த யானைக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அப்பகுதியில் 4 காட்டு யானைகள் வந்ததால், சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, இரண்டாவது நாளாக யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து தண்ணீரும், பழங்களையும் வழங்கி வந்தனர்.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப்பின் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த பெண் யானையை நிற்க வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் எழுந்து நின்ற யானை மீண்டும் வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.
கோவை மாவட்டம் பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து அப்பகுதிக்குச் சென்ற வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அந்த யானைக்கு 2 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து பாரி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதனிடையே, அப்பகுதியில் 4 காட்டு யானைகள் வந்ததால், சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து, இரண்டாவது நாளாக யானைக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து தண்ணீரும், பழங்களையும் வழங்கி வந்தனர்.
மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்குப்பின் யானையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அந்த பெண் யானையை நிற்க வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பின்னர் எழுந்து நின்ற யானை மீண்டும் வனப்பகுதிக்குள் நடந்து சென்றது.