மார்பக கட்டியை அகற்ற தழும்பில்லா சிகிச்சை - கே.எம்.சி.எச் அறிமுகம்


உலக அளவில் மார்பகக் கட்டிகளை சிறுசிறு துகள்களாக உடைத்து, அவற்றை ஊசியில் உறிஞ்சி எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. இதில் எவ்வித தழும்பும் ஏற்படாது. கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில் இத்தகைய உறிஞ்சி எடுக்கும் கருவி உதவியுடன் கட்டிகள் நீக்க சிகிச்சை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த முறையை மார்பக படமாக்கல் மற்றும் ஆய்வு ஆலோசகரான மருத்துவர் ரூபா ரங்கநாதன் வெள்ளியன்று (இன்று) அறிமுகம் செய்தார்.



சில ஆண்டுகளுக்கு முன் சான் டியாகோ பல்கலைக் கழகத்தில் படிக்கும்போதே இம்முறை செயல்பாட்டில் உள்ள மார்பக பரிசோதனை மையத்தில் பணியாற்றி ஆய்வும் மேற்கொண்டவர் மருத்துவர் ரூபா. மார்பக படமாக்கல், பரிசோதனை மற்றும் கதிரியக்க நிபுணராக 15 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றவர். 



இதுகுறித்து அவர் கூறுகையில், ''இளம் பெண்களின் மார்பகங்களில் எவ்வித வலியும், தழும்பும் இல்லாமல் முழுமையாக கட்டியை அகற்றும் சிகிச்சை உண்மையில் பிரமிக்க வைப்பதாக உள்ளது. இந்தியாவில் சில மருத்துவமனைகளில் மட்டுமே இத்தகைய சிகிச்சை அளிக்கும் முறை உள்ளது. தற்போது அது கோவை மெடிக்கல் சென்டரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெற்றிடத்தை உருவாக்கி, உறிஞ்சி எடுக்க உதவும் இந்த கருவியானது கட்டிகளை நீக்க மட்டுமின்றி ஒரு பகுதியில் உள்ள சந்தேகத்திற்கு இடமான, உணர முடியாத திசுக்களை ஆராய்ந்து கண்டறியவும் உதவும்'' என்றார்.

கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் நல்ல ஜி.பழனிசாமி கூறுகையில், ''அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் பெண்களின் மார்பக பிரச்சனைகளை தீர்க்க பல்வேறு நவீன மருத்துவ வசதிகள் உள்ளன. கோவையில் அத்தகைய வசதிகள் கொண்ட ஒரு மருத்துவ மையத்தை ஏற்படுத்தியிருப்பது மருத்துவத்தில் ஒரு புரட்சிகர மாற்றம். இந்த முறையில் முன்னோடியாக ஒரே இடத்தில் பெண்களின் பிரச்சனைகளுக்கு சரியான சிகிச்சை அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தழும்பு இல்லாத இந்த மார்பக அறுவை சிகிச்சை முறையானது மார்பக மையத்தை மேலும் ஒரு படி உயரச் செய்துள்ளது'' என்றார்.



Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...