காவிரி விவகாரம்: கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட நாம் தமிழர் கட்சியினர்



காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிப்பதைக் கண்டித்தும் தமிழகத்தில் அதிமுக, பாஜக-வைத் தவிர பல்வேறு கட்சியினர், விவசாய சங்கத்தினர் கடந்த சில நாட்களாக ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்தோர் வெள்ளியன்று (இன்று) கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.





இதுகுறித்து, போராட்டத்தில் பங்கேற்ற வீரத்தமிழர் முன்னணியின் மண்டல பொருளாளர் அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''தமிழகத்திற்கு காவிரி நீரை விடக்கூடாது என்பதில் கர்நாடக அரசை விட மத்திய பாஜக அரசு மும்முரமாக உள்ளது. கடந்த 2007ல் இருந்து காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான வழக்கு நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதிமன்றம் இதுகுறித்து உத்தரவிட அனுமதியில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. நடுநிலையாக செயல்படுவதாகக் கூறி உறுதிமொழியேற்ற மத்திய அமைச்சர்கள் தற்போது கர்நாடகம் பக்கம் சாய்ந்து விட்டனர். 





உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், மத்திய அரசு அலுவலகங்களை பூட்டு போட்டும், வரி கொடுக்காத போராட்டமும் நடத்துவோம்'' என்று அவர் கூறினார்.



இதனைத்தொடர்ந்து, ரயில் நிலைய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உட்பட 54 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.





Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...