வீர மரணமடைந்த காவலர்களுக்கு இன்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பு!

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி அன்று பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் நாடுமுழுவதும் உள்ள காவலர்களுக்கு வீர வணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது வருகிறது. 

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன  ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

இதனை அடுத்து இன்று, சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இருக்கும் வீரவணக்க நாள் நினைவிடத்தில் டிஜிபி ராஜேந்திரன், காவல் ஆணையர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். பணியின் போது உயிர் நீத்த காவலர்களின் நினைவாக இந்த வீர வணக்கம் நாள் கடைபிடிக்கப்பட்டது. மேலும், தலைநகர் தில்லியிலும் சானக்கியாபுரி பகுதியில் உள்ள காவலர்கள் நினைவிட மைதானத்தில் காவலர்கள் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று உயிர் நீத்த காவலர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...