கோவை, கோவில் மேடு பகுதி, ஜமீதர் வீதியைச் சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி ஷேமலதா (37). இவர்களுக்கு இடையே கடந்த 12 வருடத்திற்கு முன் திருமணம் நடைபெற்று 7 வயதில் பெண் மற்றும் 3 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இதனிடையே, கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடின் காரணமாக தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை விஓசி நகர் பகுதியில் ஷேமலதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சக்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு ஷேமலதாவை கண்மூடித் தனமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தலைமறைவானார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷேமலதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர் தலைமறைவான சக்தியின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
இதனிடையே, கடந்த 6 மாதத்திற்கு முன் ஏற்பட்ட கருத்துவேறுபாடின் காரணமாக தம்பதியர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) காலை விஓசி நகர் பகுதியில் ஷேமலதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த சக்தி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியைக் கொண்டு ஷேமலதாவை கண்மூடித் தனமாக தாக்கிவிட்டு அப்பகுதியில் இருந்து தலைமறைவானார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷேமலதாவை மீட்டு அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த துடியலூர் காவல் துறையினர் தலைமறைவான சக்தியின் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.