மீண்டும் விழுந்த காட்டு யானை- ஏமாற்றத்தில் வனத்துறை

கோவையை அடுத்த பெரிய தடாகம் வனப்பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை ஒன்று உடல்நலக் கோளாறு காரணமாக கீழே விழுந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் யானைக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். மேலும் பொக்லைன் உதவியுடன் அந்த யானையை தூக்கி நிறுத்த மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்காததால், சாடிவயல் யானைகள் முகாமில் இருந்து கும்கி யானை பாரி வரவழைக்கப்பட்டு காட்டு யானையை தூக்க முயற்சி மேற்கொண்டனர். 



அப்போது யானை படுத்திருக்கும் பகுதிக்கு அருகாமையில் 4 யானைகள் கொண்ட கூட்டம் வந்ததால் சிகிச்சை அளிக்கும் பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது நாளாக மருத்துவக் குழுவினர் யானைக்கு தண்ணீரும், பழங்களும் வழங்கி சிகிச்சை மேற்கொண்டனர். 

இதில், யானையில் உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வியாழனன்று இரவு பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் யானையை நிற்க வைக்க வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டனர். பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் எழுந்து நின்ற யானை, வனத்துறையினர் வைத்த தண்ணீரை குடித்துவிட்டு காட்டுப் பகுதிக்குள் நடந்து சென்றது.

இந்நிலையில், மீண்டும் வெள்ளியன்று அந்த பெண் காட்டு யானை அப்பகுதியிலேயே படுத்துக்கொண்டு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அங்கு சென்ற வனத்துறை மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அந்த யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோவையில், கடந்த சில நாட்களாக யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வரும் நிலையில், இச்சம்பவம் கால்நடை ஆர்வலர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...