ஐஏஎஸ் அகாடமியில் தீ விபத்து- ஒருவர் பலி, 4 பேர் படுகாயம்


கோவை, காந்திபார்க் அருகே இரண்டடுக்கு மாடிக் கட்டிடத்தில் தனியார் நிறுவனமான கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி செயல்பட்டு வருகிறது. இங்கு சுமார் 150க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று (இன்று) 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் அந்த அகாடமியில் தேர்வு மற்றும் பயிற்சி வகுப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது, அக்கட்டிடத்தின் அடித்தளத்தில் மின்கசிவு காரணமாக அங்கு வைக்கப்பட்டு இருந்த பட்டாசுப் பெட்டிகளில் திடீரென தீ பற்றி எரியத் தொடங்கியது. இது அருகில் இருந்த நூலகத்திலும் பரவியதால் அக்கட்டிடத்தில் அடித்தளம் முழுவதும் தீப்பற்ற தொடங்கியது. அதன் மூலம் ஏற்பட்ட புகை காரணமாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறினர். அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீ அணைக்க முன்றனர். கட்டிடத்தில் சக்திவேல், காயத்ரி, விஜயலட்சுமி, அரங்கநாதன், செல்வராஜ் ஆகிய 5 பேர் மட்டும் மேல் தளத்தில் சிக்கிக் கொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, அங்கு வந்த தீயனைப்புத் துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 





இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சக்திவேல்(23) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.தகவல் அறிந்த அப்பகுதிக்கு வந்த கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாவட்ட காவல் ஆணையர் அமல்ராஜ் சம்பவ இடத்தினையும், மீட்புப் பணிகளையும் பார்வையிட்டுனர்.







யூபிஎஸ் மின் கருவியில் ஏற்பட்ட மின் கசிவினாலேயே தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து கோவை மாவட்ட தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு அலுவலர் சந்திரன் கூறுகையில்:-

காந்திபார்கில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதை தொடர்பாக மாலை 3:45 மணியளவில் எங்களுக்கு தகவல் கிடைத்தது. தகவல் அறிந்தவுடன் அருகில் உள்ள தெற்கு, மேற்கு ஆகிய பகுதிகளில் உள்ள தீ அணைப்பு வாகனங்களை அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போது, அருகில் உள்ளவர்கள் தீயை அணைப்பதற்கு போராடி கொண்டிருந்தனர்.

பின்னர் தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கப்பட்டது. முதலில் தரை தளத்தில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அதன் மூலம் ஏற்பட்ட புகை காரணமாக முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்தில் பயிற்சி வகுப்பில் இருந்த மாணவர்கள் உடனடியாக வெளியேறினர். அதில் 5 மாணவர்கள் உள்ளே இருப்பதாக தகவல் அறிந்தபின் தீ அணைப்பு வீரர்கள் உள்ளே சென்று அவர்களை மீட்டனர். அவர்களுக்கு தேவையான முதலுதவி சிகிச்சை மூலமாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் 25 தீ அணைப்பு வீரர்கள் மற்றும் 5 அதிகாரிகள் மூலம் தீ அணைப்பை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...