இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை கொண்டுவர மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இஸ்லாமியர்களின் தனிநபர் சட்டமான ஷரீஅத் சட்டத்தை பின்தொடர்வோம் என்றும் கோவையில் உள்ள அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பும் இணைந்து வியாழனன்று பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரிவித்தனர்.

மேலும், கோவையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களிடமும், மற்ற மதத்தினரிடமும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போதாகவும் முஸ்லீம் இயக்க கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, வெள்ளியன்று (இன்று) கோவையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கோவையில் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் உள்ளனர். அவர்களிடமும், மற்ற மதத்தினரிடமும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நடத்தப்போதாகவும் முஸ்லீம் இயக்க கூட்டமைப்பினர் தெரிவித்திருந்தனர்.

இதனை தொடர்ந்து, வெள்ளியன்று (இன்று) கோவையில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் மத்திய அரசுக்கு எதிராக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டனர்.