கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (21.10.2016) வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவது தொடர்பாக அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு அதிவிரைவுபடை, கடல் காவல் படை, 110- படைபிரிவு அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பேசிகையில்:-
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு அலுவலர்களை சுழற்ச்சி முறையில் அமர்த்தப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. இதுவரையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் இரண்டாம் கட்ட ஆய்வுக்கூட்டங்களும், கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது. அதுபோலவே, மழைக் காலங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சிரமங்களையும், அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு அதிவிரைவுபடை, கடல் காவல் படை, 110- படைபிரிவு ஆகிய குழுக்களும் இணைந்து மீட்பு பணிகளில் செயல்பட வேண்டும் என்றும் மீட்பு பணி நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவசர காலங்களில் மீட்பு பணிக்கென துரித நடவடிக்கை குழுக்களை ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், காவல் துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா, அதிவிரைவுப்படை துணை கமாண்டன்ட் ஜாபர், மத்திய பாதுகாப்பு அதிவிரைவுப்படை கமாண்டன்ட் சஞ்சய்சிங், இரண்டாம் நிலை அலுவலர் ஜி.பி.யுனியன், கடல்காவல்படை கேப்டன் அமுதகுமார், 110 – படைபிரிவு கேப்டன் சந்தீப் ஜாதவ், மாவட்ட கூடுதல் காவல் கண்கானிப்பாளர் முத்தரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பேசிகையில்:-
வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் பல்வேறு அலுவலர்களை சுழற்ச்சி முறையில் அமர்த்தப்பட்டு முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றது. இதுவரையில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம், பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறை அலுவலர்களுடன் இரண்டாம் கட்ட ஆய்வுக்கூட்டங்களும், கல்லூரி மாணவ மாணவியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் ஆய்வுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது. அதுபோலவே, மழைக் காலங்களில் எதிர்பாராத விதமாக ஏற்படும் சிரமங்களையும், அசாதாரண சூழ்நிலையை எதிர்கொள்ள ஏதுவாக கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள, அதிவிரைவுப்படை, மத்திய பாதுகாப்பு அதிவிரைவுபடை, கடல் காவல் படை, 110- படைபிரிவு ஆகிய குழுக்களும் இணைந்து மீட்பு பணிகளில் செயல்பட வேண்டும் என்றும் மீட்பு பணி நடைபெறும் இடங்களில் போதுமான பாதுகாப்பு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவசர காலங்களில் மீட்பு பணிக்கென துரித நடவடிக்கை குழுக்களை ஏற்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் எனவும், மாவட்ட ஆட்சித் தலைவர் கேட்டுக் கொண்டார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், காவல் துணை ஆணையர் லட்சுமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) பிரியங்கா, அதிவிரைவுப்படை துணை கமாண்டன்ட் ஜாபர், மத்திய பாதுகாப்பு அதிவிரைவுப்படை கமாண்டன்ட் சஞ்சய்சிங், இரண்டாம் நிலை அலுவலர் ஜி.பி.யுனியன், கடல்காவல்படை கேப்டன் அமுதகுமார், 110 – படைபிரிவு கேப்டன் சந்தீப் ஜாதவ், மாவட்ட கூடுதல் காவல் கண்கானிப்பாளர் முத்தரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.