மாணவர்கள் சாதனை புரிந்து தொழில் முனைவராக திகழ வேண்டும்- துணை வேந்தர் மணியன்

சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் 61 மாணவர்களுக்கு பட்டங்களும், முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மணியன் கலந்து கொண்டார். 



அவர் பேசுகையில்:- இந்திய ஜவுளித்துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்துறையின் பங்களிப்பு முக்கியமானதாகும். மாணவர்கள் இந்நாள் அவர்களது பெருமிதமிக்க நாளாகும். இதற்காக பாடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும். மாணவர்களின் பங்கு மூலம் உலக அரங்கில் பொருளாதாரம் உயர்ந்து நிற்கவும், நாடு முன்னேறவும் பாடுபட வேண்டும். தற்போதைய ஜவுளித் துறையில் பங்களிப்பு 14 சதவீதம் உற்பத்தி அளவில் உள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அது முக்கிய பங்கு அளிக்கிறது. இத்துறை 3.5 கோடி மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உள்ளது. உலக அளவில் சாதனை புரிய பல மாணவர்களை இக்கல்லூரி  உருவாக்குகிறது. அத்துடன் நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் பல சாதனைகளை புரிந்து தொழில் முனைவராக திகழ வேண்டும். மாணவர்களிடத்தில் உள்ள திறமையை ஊக்குவித்து அவர்களை நல்ல குடிமக்களாக திகழ வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இவ்விழாவில், தென் இந்தியாவில் ஜவுளி ஆராய்ச்சி கழக இயக்குநர் பிரகாஷ் வாசுதேவன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம். சண்முகம், திருப்பூர் பாயிண்ட் நிட் ஏற்றுமதி நிர்வாக இயக்குநர் பாயிண்ட் மணி, கல்லூரி இயக்குநர் ரமேஷ்குமார், டீன் பெருமாள்சாமி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...