சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் 8வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் 61 மாணவர்களுக்கு பட்டங்களும், முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் மணியன் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில்:- இந்திய ஜவுளித்துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்துறையின் பங்களிப்பு முக்கியமானதாகும். மாணவர்கள் இந்நாள் அவர்களது பெருமிதமிக்க நாளாகும். இதற்காக பாடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும். மாணவர்களின் பங்கு மூலம் உலக அரங்கில் பொருளாதாரம் உயர்ந்து நிற்கவும், நாடு முன்னேறவும் பாடுபட வேண்டும். தற்போதைய ஜவுளித் துறையில் பங்களிப்பு 14 சதவீதம் உற்பத்தி அளவில் உள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அது முக்கிய பங்கு அளிக்கிறது. இத்துறை 3.5 கோடி மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உள்ளது. உலக அளவில் சாதனை புரிய பல மாணவர்களை இக்கல்லூரி உருவாக்குகிறது. அத்துடன் நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் பல சாதனைகளை புரிந்து தொழில் முனைவராக திகழ வேண்டும். மாணவர்களிடத்தில் உள்ள திறமையை ஊக்குவித்து அவர்களை நல்ல குடிமக்களாக திகழ வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில், தென் இந்தியாவில் ஜவுளி ஆராய்ச்சி கழக இயக்குநர் பிரகாஷ் வாசுதேவன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம். சண்முகம், திருப்பூர் பாயிண்ட் நிட் ஏற்றுமதி நிர்வாக இயக்குநர் பாயிண்ட் மணி, கல்லூரி இயக்குநர் ரமேஷ்குமார், டீன் பெருமாள்சாமி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அவர் பேசுகையில்:- இந்திய ஜவுளித்துறையில் உள்ள வாய்ப்புகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அத்துறையின் பங்களிப்பு முக்கியமானதாகும். மாணவர்கள் இந்நாள் அவர்களது பெருமிதமிக்க நாளாகும். இதற்காக பாடுபட்ட பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களை மாணவர்கள் நன்றி தெரிவித்து பாராட்ட வேண்டும். மாணவர்களின் பங்கு மூலம் உலக அரங்கில் பொருளாதாரம் உயர்ந்து நிற்கவும், நாடு முன்னேறவும் பாடுபட வேண்டும். தற்போதைய ஜவுளித் துறையில் பங்களிப்பு 14 சதவீதம் உற்பத்தி அளவில் உள்ளது. நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அது முக்கிய பங்கு அளிக்கிறது. இத்துறை 3.5 கோடி மக்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு உள்ளது. உலக அளவில் சாதனை புரிய பல மாணவர்களை இக்கல்லூரி உருவாக்குகிறது. அத்துடன் நம்மிடம் உள்ள தொழில்நுட்பத்தின் உதவியின் மூலம் பல சாதனைகளை புரிந்து தொழில் முனைவராக திகழ வேண்டும். மாணவர்களிடத்தில் உள்ள திறமையை ஊக்குவித்து அவர்களை நல்ல குடிமக்களாக திகழ வைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.
இவ்விழாவில், தென் இந்தியாவில் ஜவுளி ஆராய்ச்சி கழக இயக்குநர் பிரகாஷ் வாசுதேவன், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா எம். சண்முகம், திருப்பூர் பாயிண்ட் நிட் ஏற்றுமதி நிர்வாக இயக்குநர் பாயிண்ட் மணி, கல்லூரி இயக்குநர் ரமேஷ்குமார், டீன் பெருமாள்சாமி, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.