ஐஏஎஸ் அகாடமி தீ விபத்தில் பாதித்த மாணவர்களை அமைச்சர்கள் நேரில் சந்தித்தனர்

கோயம்புத்தூர், காந்திப்பார்கில் உள்ள கே.பி.ஆர் ஐஏஎஸ் அகாடமி பயிற்சி வளாகத்தில் நேற்று மாலை 5.00 மணியளவில் திடீர் என ஏற்பட்ட நச்சுப்புகையினால் அங்கு படித்துக்கொண்டிருந்த காயத்ரி, அரங்கநாதன், விஜயலட்சுமி, முத்துமணிகண்டராஜா, கிரிராஜன் ஆகிய மாணவர்களுக்கு  திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அரசு மருத்துகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் பார்வையிட்டு சிறப்பான சிகிச்சை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். இவ்விபத்தில் சக்திவேல் என்ற மாணவன் மருத்துமனை அழைத்துசெல்லும் வழியிலேயே மரணமடைந்தார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ், மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன், சட்டமன்ற உறுப்பினர்கள் பி.ஆர்.ஜி.அருண்குமார், அம்மன் கே அர்ச்சுனன், மருத்துவக்கல்லூரி முதல்வர் எட்வின்ஜோ, துணை ஆணையர் காந்திமதி, வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உள்ளிருப்பு மருத்துவ அலுவலர் சவுந்தரவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...