கோவை தீ விபத்தில் சிகிச்சை பெரும் 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம்

கோவையில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டு அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 5 பேரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அதில் இரண்டு பேர் நாளை வீட்டுக்கு அனுப்பி வைக்கபட உள்ளதாக அம்மருத்துவமனை முதல்வர்  எட்வின் ஜோ தெரிவித்துள்ளார்.

கோவை காந்திபூங்கா அருகே கேபிஆர் ஐஏஎஸ் அகாடமி என்ற இலவச பயிற்சி மையத்தில், நேற்று மதியம் 3.45 மணியளவில் சுமார்  60 மாணவ, மாணவிகள் பயிற்சி தேர்வு எழுதி கொண்டிருந்த போது, திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து மாணவர்கள் அவசரமாக வெளியேறிய நிலையில் சில மாணவர்கள் கட்டிடத்திற்குள் சிக்கி கொண்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து தீயை அணைக்க முற்பட்டதுடன், சிக்கியிருந்தவர்களை மீட்க முயன்றனர். தீயணைப்பு துறையினருடன் இணைந்து பொது மக்கள் மற்றும் மாணவர்கள் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் கதவுகளை உடைத்து சிக்கியவர்களை மீட்க உதவினர். இதையடுத்து 2 மாணவிகள் உட்பட 6 பேரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே அரசு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லும் வழியில் சக்திவேல் என்ற மாணவர் மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்தார். மற்ற 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இதில், 4 பேர் அம்மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஆவர். தீவிபத்தின் போது காயத்திரி என்ற மாணவியின் உடல்நிலை ஆபத்தான சூழலில் நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்த மருத்துவர்கள் தற்போது முன்னேற்றம் இருப்பதாகவும், அதே வேலையில் மற்ற 4 பேரின் உடல்நிலை தேறி வருவதாகவும், அதில் 2 பேரை நாளை வீட்டுக்கு அனுப்ப உள்ளதாக அரசு மருத்துவமனை முதல்வர் எட்வின் ஜோ தெரிவித்தார். தனியார் ஐஏஎஸ் மையத்தில் ஏற்பட்டது பட்டாசு விபத்தில் இல்லை என மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோர் தொடர்ந்து கூறி வந்த வேலையில் தற்போது அரசு மருத்துவமனை முதல்வரும் அதே கருத்தை கூறுவது பொதுமக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...