ஈராக்கில் மனிதகுண்டு தாக்குதல் 16 பேர் பலி

ஈராக்கில் குர்தீஷ் அமைப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ள நகரம் கிர்குக்.  இதன் அருகே உள்ள டிபிஸ் என்ற இடத்தில் மின்சார உற்பத்தி நிலையம் ஒன்றை ஈரான் நிறுவனம் அமைத்து வருகிறது. நேற்று காலை உடம்பில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு துப்பாக்கியுடன் தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் உள்ளே புகுந்து நடத்திய தாக்குதலில் ஈராக் அதிகாரிகள் 12 பேர், 4 ஈரான் இன்ஜினியர்கள் கொல்லப்பட்டனர்.இதேபோல் கிர்குக் நகரில் போலீஸ் கட்டுபாட்டு மையத்திலும் 4 தீவிரவாதிகள் புகுந்தனர்.

ஒருவன் குண்டுகளை வெடிக்கும் முன் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டான். மேலும் 2 பேர் போலீசார் சுற்றிவளைத்ததால் குண்டுகளை வெடிக்கச்செய்து பலியானார்கள். இதனால் கிர்குக் நகரில்பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் ஐஎஸ் தீவிரவாதிகள் ஈடுபட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...