பிரேசில் நிறுவனத்திடம் விமானம் வாங்கியதில் முறைகேடு: லண்டன் வாழ் இந்தியர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு


பிரேசில் நிறுவனத்திடம் விமானம் வாங்கியதில் முறைகேடு: லண்டன் வாழ் இந்தியர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு

விமானம் வாங்குவதற்கு ஒப்பந்தம்


இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம், பிரேசில் நாட்டின் பிரபல விமான கம்பெனியான எம்பிராயரிடம் இருந்து 2008–ம் ஆண்டு 3 நவீன விமானங்களை வாங்கி அதில் அதிநவீன ரேடார் சாதனங்களை பொருத்தி ராணுவத்துக்கு பயன்படுத்த முடிவு செய்தது.

இதற்காக எம்பிராயர் நிறுவனத்துடன் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 208 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு (ரூ.1360 கோடி) ஒப்பந்தமும் செய்து கொண்டது. இந்த விமானங்களை பிரேசில் நிறுவனம் இந்தியாவிடம் 2011–ம் ஆண்டு முதல் படிப்படியாக 2013–ம் ஆண்டு இறுதிக்குள் ஒப்படைத்துவிட்டது.




ரூ.360 கோடி கமிஷன

இந்த விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் லண்டனில் வசிக்கும் இந்தியரான விபின் கன்னா (வயது 87) என்ற இடைத்தரகர் மூலம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு ரூ.360 கோடி கமிஷன் கொடுக்கப்பட்டதாகவும் சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா நடத்திய நீதி விசாரணையில் தெரிய வந்தது. இதுபற்றி பிரேசில் ஊடகங்களில் செய்தி வெளியானது.
சிங்கப்பூரில் உள்ள விபின் கன்னாவுக்கு சொந்தமான நிறுவனத்தின் மூலம் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதற்காக அவருக்கு 2009–ல் ஆஸ்திரியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் வழியாக பணம் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

சி.பி.ஐ. வழக்கு பதிவ


சி.பி.ஐ. கடந்த மாதம் இதுபற்றி பூர்வாங்க விசாரணை நடத்தியது. அதில் இடைத்தரகருக்கு கமிஷன் கொடுத்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, லண்டனில் வசிக்கும் ஆயுத ஒப்பந்த இடைத்தரகரான விபின் கன்னா மீது சி.பி.ஐ. நேற்று வழக்கு பதிவு செய்தது.
இதுபற்றி சி.பி.ஐ. அதிகாரிகள் கூறும்போது, ‘‘இங்கிலாந்தில் வசிக்கும் இடைத்தரகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவருடைய பெயர் நாங்கள் விசாரித்து வரும் இன்னொரு ஆயுத ஒப்பந்தத்திலும் இடம்பெற்று உள்ளது’’ என்றனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...