கோவை, ரேஸ்கோர்ஸ் சாலையில் சந்தனமரம் வெட்ட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். கோவையில் பல்வேறு இடங்களில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் சமீபத்தில் வெட்டப்பட்டு வருகின்றது. இதை தொடர்ந்து நேற்று நள்ளிரவு 1 மணியளவில் ரேஸ்கோர்ஸ் சாலையில் மாவட்ட ஆட்சியர் இல்லத்தின் அருகில் உள்ள சந்தனமரங்கள் மர்மநபர்களால் வெட்டப்பட்டு இருந்தது. அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் இருந்ததால் மர்மநபர்கள் சந்தனமரத்தினை பாதியில் வெட்டிவிட்டு விட்டுச் சென்றனர். தகவல் அறிந்த ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் மர்மநபர்களை தேடி வருகின்றனர்.