உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு -ஆட்சித்தலைவர் மேற்பார்வை

கோயம்புத்தூர் சித்தாபுதூர் அரசு மேனிலைப்பள்ளியில் (22.10.2016) இன்று ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

 



இது குறித்து அவர் பேசுகையில்:-

ஆசிரியர் தேர்வு வாரிய மூலம் அரசு பொறியியல் உதவி பேராசிரியர் பணிக்கான எழுத்துத்தேர்வு கோயம்புத்தூர் மாவட்டத்தில் 16 மையங்களில் நடைபெறுகிறது. இத்தேர்விற்காக 6,622 பேர் விண்ணபத்துள்ளார்கள். இதில் இன்று 4,173 பேர் தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு பணிக்காக 80 முதல்நிலை கண்காணிப்பு அலுவலர்கள் 375 கண்காணிப்பு அலுவலர்கள் 80 நிலைய அலுவலர்கள் 32 பறக்கும்படை அலுவலர்கள் 126 உதவி பணியாளர்கள் என மொத்தம் 693 அலுவலர்கள் பணிகளை மேற்கொண்டு உள்ளார்கள். இத்தேர்வு நடைபெறும் மையங்களில் தேர்வு எழுதுவோர்க்கு தேவையான குடிநீர் வசதி, தடையற்ற மின்சாரம் போன்ற அத்தியாசிய தேவைகள் வழங்கப்பட்டதுடன் பாதுகாப்பிற்காக ஒவ்வொரு மையத்திற்கும் காவல்துறையின் மூலம் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளனர். எனவே தேர்வு எழுதுவோர் எவ்வித அச்சமும்மின்றி தேர்வு எழுதி பயன்பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஆய்வின் போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் மற்றும் அரசு அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...