பாதுகாப்பு இல்லாத கழிப்பிடம் மக்கள் அவதி

கோவை பூசாரிபாளையம் பகுதி அருகே அச்சுறுத்தும் நிலையில் உள்ள பெண்கள் கழிப்பிடத்தை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை, பூசாரிபாளையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது, ஆனால் போதிய மறைப்புகள் இல்லாததாலும், அதை ஒட்டியே ஆண்கள் கழிப்பிடம் கட்டப்பட்ட வருவதால் பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தகரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் மீது வேளாண் பல்கலை கழகத்தை ஒட்டியுள்ள மரம் உடைந்து விழுந்துள்ளது, அதுவும் இது வரை அகற்றபடவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

அதேபோல் அப்பகுதி அருகே மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள பொதுகழிப்பிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சில நபர்கள் பத்து வயது சிறுவனை கழிப்பிடத்திற்கு பின்னால் அழைத்து சென்று கட்டி போட்டு சராமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போதிய பாதுக்காப்பு இல்லாத நிலையில் கழிப்பிடங்கள் உள்ளதால் அப்பகுதி பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...