கோவை மாவட்டம் வால்பாறையில் அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவதால் அங்குள்ள ஆட்டோ மற்றும் வாடகை கார்கள் நிறுத்த ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்ட வால்பாறை பகுதிகள் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவு பயணிகள் வரவு அதிகரிக்கும். பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வால்பாறையில் மொத்தம் 80 ஆட்டோக்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகை வாகனங்களை நிறுத்த தனியாக ஸ்டேண்டுகள் இல்லாததால் சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பொதுக்கூட்டங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறி சில நேரங்களில் சாலையில் உள்ள ஆட்டோ மற்றும் கார்களை அகற்ற காவல் துறையினர் நிர்பந்தம் செய்வதால் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்க கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக நகராட்சியின் முக்கிய பகுதியான பேருந்து நிலையங்களுக்கு அருகே அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக வால்பாறையை சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து வருவதும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு பின்னடைவாக தான் பார்க்க முடிகிறது.
கோவை மாவட்ட வால்பாறை பகுதிகள் அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் முக்கிய பகுதியாக உள்ளது. குறிப்பாக விடுமுறை காலங்களில் வழக்கத்தை விட அதிகமான அளவு பயணிகள் வரவு அதிகரிக்கும். பொதுவாக இங்கு வரும் சுற்றுலா பயணிகள் வாடகை கார்கள் மற்றும் ஆட்டோக்களையே பயன்படுத்தி வருகின்றனர். இதற்காக வால்பாறையில் மொத்தம் 80 ஆட்டோக்கள் மற்றும் 70 க்கும் மேற்பட்ட வாடகை கார்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வாடகை வாகனங்களை நிறுத்த தனியாக ஸ்டேண்டுகள் இல்லாததால் சாலைகளில் நிறுத்த வேண்டிய நிலை உள்ளது.
இதனால் பொதுக்கூட்டங்கள் மற்றும் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக கூறி சில நேரங்களில் சாலையில் உள்ள ஆட்டோ மற்றும் கார்களை அகற்ற காவல் துறையினர் நிர்பந்தம் செய்வதால் இவர்களின் அடிப்படை வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்க கூடிய அவலம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாடகை வாகனங்களை நிறுத்த தனியார் ஸ்டேண்டுகள் அமைத்து தர வேண்டும் என ஓட்டுநர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக நகராட்சியின் முக்கிய பகுதியான பேருந்து நிலையங்களுக்கு அருகே அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். பொதுவாக வால்பாறையை சுற்றுலா பகுதியாக அறிவிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் வரத்தும் குறைந்து வருவதும் வாடகை வாகன ஓட்டிகளுக்கு பின்னடைவாக தான் பார்க்க முடிகிறது.