கோயமுத்தூர், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் IQAC சார்பில் "கல்வி மற்றும் நிர்வாகத் தரமேம்பாட்டுத் தணிக்கையின் சிக்கல்களும் சாவல்களும்" என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை தேசிய தர மதிப்பீட்டு குழுவின் நிதிநல்கையின் கீழ் 21.10.2016 மற்றும் 22.10.16 ஆகிய நாட்களில் நடைபெற்றது.
இந்நிகழ்வை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் முதல்வர் கருணாகரன் தலைமை ஏற்க, கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முத்துசாமி தொடங்கிவைத்து உரையாற்றினார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் சிறப்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சார்ந்த துறைசார் வல்லுநர்கள் பயன்பெறும் வகையிலான கருத்துக்களையும் பயிற்சியையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பல்வேறு துறைப் பேராசிரியர்கள், எஸ்.என்.ஆர். கல்லூரி பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இந்நிகழ்வினை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இந்நிகழ்வை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் முதல்வர் கருணாகரன் தலைமை ஏற்க, கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முத்துசாமி தொடங்கிவைத்து உரையாற்றினார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் சிறப்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சார்ந்த துறைசார் வல்லுநர்கள் பயன்பெறும் வகையிலான கருத்துக்களையும் பயிற்சியையும் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பல்வேறு துறைப் பேராசிரியர்கள், எஸ்.என்.ஆர். கல்லூரி பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இந்நிகழ்வினை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.