எஸ்.என்.ஆர் கல்லூரியில் பேராசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறை

கோயமுத்தூர், எஸ்.என்.ஆர் சன்ஸ் கல்லூரியில் IQAC சார்பில் "கல்வி மற்றும் நிர்வாகத் தரமேம்பாட்டுத் தணிக்கையின் சிக்கல்களும் சாவல்களும்" என்ற தலைப்பிலான இரண்டு நாள் பயிற்சிப்பட்டறை தேசிய தர மதிப்பீட்டு குழுவின் நிதிநல்கையின் கீழ் 21.10.2016 மற்றும் 22.10.16 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

இந்நிகழ்வை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் முதல்வர் கருணாகரன் தலைமை ஏற்க, கோவை என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் முத்துசாமி தொடங்கிவைத்து உரையாற்றினார். காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக வேதியியல் துறைத் தலைவர் மற்றும் IQAC இயக்குநர் சேதுராமன் சிறப்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற அமர்வுகளில் தமிழகத்தின் பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சார்ந்த துறைசார் வல்லுநர்கள் பயன்பெறும் வகையிலான கருத்துக்களையும் பயிற்சியையும் வழங்கினர். 

இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கல்லூரிகளிலிருந்து பல்வேறு துறைப் பேராசிரியர்கள், எஸ்.என்.ஆர். கல்லூரி பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயன்பெற்றனர். இந்நிகழ்வினை எஸ்.என்.ஆர். சன்ஸ் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பவியல் துறைத்தலைவர் மற்றும் IQAC ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...