கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த அன்சாரி அவரது மனைவி ஜெய்னியா (34). இவர் நேற்று மதியம் ஒப்பணக்கார வீதிக்கு வீட்டுற்கு தேவையான உபகாரங்களை வாங்குவதற்கு கடைவீதிக்கு வந்துள்ளார். கடைவீதி பகுதிகளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் அலைமோதியது, இக்கூட்ட நெரிசலில் ஜெய்னியாவின் 3 பவுன் செயின் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். பின்னர் வீட்டுக்கு வந்து பார்க்கையில் நகை கொள்ளை போனது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் ஒப்பணக்கார வீதியில் உள்ள வெரைட்டிஹால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.