பொள்ளாச்சி சாலையில் உள்ள சாய் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் (48). இவர் கடந்த 18ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இன்று வீடு திரும்பிய அவர் வீட்டின் பூட்டை உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியானார். வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடந்த நிலையில் இருந்ததை அறிந்து அருகில் உள்ள போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கைரேகை நிபுணர்களின் உதவி மூலம் மூன்று நபர்களின் கைரேகை கைப்பற்றினர். இதன் மூலம் சம்பந்தப்பட்டவர்களை காவல்துறையினர் திருடர்களை தேடி வருகின்றனர். இந்தசம்பவத்தில் 4 சவரன் நகையை திருட்டு போனதாக கண்ணன் தெரிவித்தார்.