மேம்பால பணிகள் நடைபெறுவதால் சென்னையில் மூர்மார்க்கெட்- திருவொற்றியூர் இடையே 42 மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரயில்கள் நிறுத்தம்: சென்னையில் இருந்து கூடூர் செல்லும் பாதையில் கொருக்குப்பேட்டை மற்றும் தண்டையார்பேட்டை இடையே புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதில் என்ஜினீயரிங் பணிகள் இன்று (அக்., 23) நடக்கிறது. இதன் காரணமாக அந்த பாதையில் புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூர்- மூர்மார்க்கெட் இடையிலான பகுதியில் மட்டும் 42 மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.