முதல்வர் குணமடைய வடஇந்தியர்கள் சிறப்பு வழிபாடு


தமிழக முதல்வர் விரைவில் குணமடைய வேண்டி கோவையில் வடஇந்திய சமாஜ் அமைப்பினர் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட உள்ளனர்.

தமிழக முதல்வர் உடல் நலக் குறைவின் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவர் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு அரசியல் கட்சியினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதிமுக, உறுப்பினர்களும், தொண்டர்களும் ஆங்காங்கே பல்வேறு விதமான வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சேவா ஆசிரமத்தில் வடஇந்தியர் சமாஜ் அமைப்பினர், முதல்வர் ஜெயலலிதா குணமடைய வேண்டி ஞாயிறன்று (இன்று) சிறப்பு பிரார்த்தனை நடத்த உள்ளனர். இதுகுறித்து நம் நிருபரிடம் அந்த அமைப்பின் தலைவர் சரவன் போத்ரா கூறுகையில்,

''முதல்வர் குணமடைய வேண்டி இன்று புனித பிரார்த்தனை, மகாருத்ரா அபிஷேகம், மகா மிருத்துஞ்சேயா ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பிரார்த்தனைகளும், அன்னதானமும் வழங்க திட்டமிட்டுள்ளோம். இதில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக உறுப்பினர் அம்மன் கே.அர்ஜூனன், அமைச்சர் நாகராஜ், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி. அருண் குமார் ஆகியோர் பங்கேற்று வழிபாட்டில் ஈடுபட உள்ளனர். 

மேலும் இதில், கோவையில் உள்ள வட இந்தியர்கள், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது'' என தெரிவித்தார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...