ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஆர்.எஸ்.புரா பகுதியில் பாக்., ராணுவம் மீண்டும் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் மேலும் ஒரு பி.எஸ்.எப்., ஜவான் பலியானார்.
அத்துமீறி தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ்.புரா பகுதிக்கு அருகே சர்வதேச எல்லையில், பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 20 பி.எஸ்.எப்., மற்றும் 5 ராணுவ முகாம்களை குறி வைத்து பாக்., ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் பி.எஸ்.எப்., ஜவான் ஒருவர் பலியானார் மேலும் ஒரு பி.எஸ்.எப்., வீரரும், ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளனர்.
எல்லையில் பதற்றம்: பாக்., தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாக்., ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
அத்துமீறி தாக்குதல்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ்.புரா பகுதிக்கு அருகே சர்வதேச எல்லையில், பாக்., ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். 20 பி.எஸ்.எப்., மற்றும் 5 ராணுவ முகாம்களை குறி வைத்து பாக்., ராணுவத்தினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இத்தாக்குதலில் பி.எஸ்.எப்., ஜவான் ஒருவர் பலியானார் மேலும் ஒரு பி.எஸ்.எப்., வீரரும், ஒரு ராணுவ வீரரும் காயமடைந்துள்ளனர்.
எல்லையில் பதற்றம்: பாக்., தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். பாக்., ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருவதால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.