திருச்சி பாரதிதாசன் பல்கலை. விழாவில் 40 மாணவ, மாணவியர் மயக்கம்

திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தனர்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பாவேந்தர் பாரதிதாசன் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார். இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடனப்போட்டிகள் புதிய ஆடிட்டோரியத்தில் நடந்தது. 

இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனமாடினர். 

இந்த ஆடிட்டோரியத்தில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால் போட்டியில் நடனமாடிய மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடிட்டோரியம் அருகே குடிநீர் வசதி இல்லை. மேலும், முதலுதவி வசதி எதுவும் இல்லை. இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மயக்கமடைந்த மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அரங்கில் காற்றோட்ட வசதி இல்லாததால் பார்வையாளர்களும் மூச்சுத் திணறினர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...