திருச்சி: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த விழாவில் 40க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென மயங்கி விழுந்தனர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பாவேந்தர் பாரதிதாசன் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார். இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடனப்போட்டிகள் புதிய ஆடிட்டோரியத்தில் நடந்தது.
இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனமாடினர்.
இந்த ஆடிட்டோரியத்தில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால் போட்டியில் நடனமாடிய மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடிட்டோரியம் அருகே குடிநீர் வசதி இல்லை. மேலும், முதலுதவி வசதி எதுவும் இல்லை. இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மயக்கமடைந்த மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அரங்கில் காற்றோட்ட வசதி இல்லாததால் பார்வையாளர்களும் மூச்சுத் திணறினர்.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நேற்று மாலை பாவேந்தர் பாரதிதாசன் மணிமண்டப திறப்பு விழா நடைபெற்றது. திரைப்பட இயக்குனர் பாரதிராஜா திறந்து வைத்தார். இதையொட்டி காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை நடனப்போட்டிகள் புதிய ஆடிட்டோரியத்தில் நடந்தது.
இதில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனமாடினர்.
இந்த ஆடிட்டோரியத்தில் போதிய காற்றோட்ட வசதி இல்லாததால் போட்டியில் நடனமாடிய மாணவ, மாணவிகள் 40க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து மயக்கமடைந்து விழுந்தனர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆடிட்டோரியம் அருகே குடிநீர் வசதி இல்லை. மேலும், முதலுதவி வசதி எதுவும் இல்லை. இதையடுத்து முதலுதவி அளிக்கப்பட்டு மயக்கமடைந்த மாணவிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அரங்கில் காற்றோட்ட வசதி இல்லாததால் பார்வையாளர்களும் மூச்சுத் திணறினர்.