மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 1,503 ஆண்டு சிறை

கலிபோர்னியா: அமெரிக்காவில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு, 1,503 ஆண்டுகள், சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அமெரிக்காவில், கலிபோர்னியா மாகாணம், பிரஸ்னோ நகரைச் சேர்ந்தவன் ஜான், 41; இவன், தன் மகளை, 2009 - 2013 வரை, தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது. தற்போது, 23 வயதாகும் அந்தப் பெண், தந்தை தனக்கு செய்த கொடுமை குறித்து போலீசில் புகார் செய்தார்; போலீசார், ஜானை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை, பிரஸ்னோ கோர்ட்டில் நடந்து வந்தது.

தந்தைக்கு வருத்தம் கிடையாது:

வழக்கை விசாரித்த நீதிபதி, எட்வர்ட் சர்கிசியனிடம், பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலம்: என்னை, உறவினர் ஒருவர் பலாத்காரம் செய்தார். இதிலிருந்து காப்பாற்ற வேண்டிய தந்தை, அந்த சம்பவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, என்னை பலாத்காரம் செய்தார். சிறுமியாக இருந்ததால், என்னால் எதிர்ப்பு தெரிவிக்க முடியவில்லை; நான் அடைந்த வலி மற்றும் வேதனைக்காக, ஒரு போதும் என் தந்தை வருத்தம் அடைந்தது கிடையாது. இவ்வாறு, அந்த பெண் வாக்குமூலம் அளித்தார். 

வாழ அருகதையற்றவன்:

இந்த வழக்கில், ஜானுக்கு, 1,503 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். நீதிபதி கூறுகையில், “குற்றவாளி, இந்த உலகில் வாழவே அருகதையற்றவன்; சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானவன். இவன், வாழ்நாள் முழுவதும் சிறையிலேயே கழிக்க வேண்டும்,'' என்றார்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...