தமிழ் மாணவர்கள் படுகொலை: யாழ் மாவட்ட செயலக முன்பு மாணவர்கள் போராட்டம்

யாழ்ப்பாணத்திலுள்ள கொக்குவில் பகுதி போலீஸ் சோதனை சாவடி அருகே வெள்ளிக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்ற போது, இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் இருவர், போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

முதலில், அந்த மாணவர்களை தாங்கள் சுட்டுக் கொல்லவில்லை என்றும், சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி இருவரும் உயிரிழந்தததாகவும் போலீஸார் தெரிவித்தனர். ஆனால், பிரேதப் பரிசோதனையின்போது, இரு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டது உறுதியானது.

இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக 5 போலீஸார் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை அடுத்த மாதம் 4-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தும்படி, அந்நாட்டு காவல்துறை தலைமை ஆய்வாளருக்கு அதிபர் சிறீசேனா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகம் முன்பாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகச்தைச் மாணவர்கள் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். செயலகத்திற்கு பணிக்கு வரும் ஊழியர்களை உள்ளே செல்ல முடியாத அளவிற்கு வெளியே கண்டனப் போரட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...