ஆந்திரா-ஒடிசா எல்லையில் நடந்த என்கவுண்டரில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

மால்கான்கிரி, ஆந்திரா - ஒடிசா மாநில எல்லையில் நடந்த என்கவுண்டரில் 19 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

ஆந்திர பிரதேசம் - ஒடிசா எல்லையில் இருமாநில போலீசாரும் இணைந்து மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை தேடும் வேட்டையில் நேற்று இரவு ஈடுபட்டனர். அப்போது மால்கான்கிரியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவியில் இருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் முகாம் மீது போலீஸ் படை தாக்குதல் நடத்தியது. மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கூட்டத்திற்கு கூடியிருந்த போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் சுமார் 50-60 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் கலந்துக் கொண்டனர் என்று முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. நேற்று இரவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.

சண்டை நடைபெற்ற இடத்தில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் மூன்று ஏ.கே. 47 துப்பாக்கிகள் மற்றும் பல்வேறு ரகத்தை சேர்ந்த துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. மால்கான்கிரி மாவோயிஸ்ட் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்றாகும். 

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் மூன்று போலீசாரும் காயம் அடைந்து உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...