சிகிச்சைக்குப் பின் குட்டி ஈன்ற காட்டு யானை- வனத்துறையினர் மகிழ்ச்சி

உடல் நலம் பாதிக்கப்பட்டு வனத்துறையினரால் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த பெண் காட்டு யானை திங்களன்று ஆண் குட்டியை ஈன்றது.

கோவை, பெரிய தடாகம் அருகே உள்ள வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த பெண் காட்டு யானைக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்துறை மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில், வயிற்றில் ஏற்பட்டுள்ள பிரச்சனையால் பாதிக்கப்பட்ட அந்த பெண் யானைக்கு தொடர்ந்து சிகிச்சை அளிப்பதற்காக சாடிவயல் யானைகள் முகாமிற்கு அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில், திங்களன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் அந்த பெண் யானை ஒரு ஆண் குட்டியை ஈன்றது. இதைத்தொடர்ந்து அந்த இரு யானைகளுக்கும் வனத்துறையினர் சிகிச்சை மற்றும் உணவை வழங்கி பாதுகாத்து வருகின்றனர். 

உடல் நலம் பாதிக்கப்பட்டு பரிதாப நிலையில் மீட்கப்பட்ட பெண் காட்டு யானை தற்போது குட்டி ஈன்று நல்லமுறையில் உள்ளதால் அதனை மீட்ட வனத்துறையினர் மற்றும் வனத்துறை மருத்துவர்கள் மனோகரன் மற்றும் விஜயராகவன் ஆகியோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...