பாகிஸ்தான் தீவிரவாதிகளை அழிக்க தயங்க மாட்டோம்: அமெரிக்கா கடும் எச்சரிக்கை

தேவைப்பட்டால் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படும் தீவிரவாத குழுக்களை தனியாக செயல்பட்டு அழிக்கவும் தயங்க மாட்டோம் என அமெரிக்கா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்வதைத் தடுக்கும் துறைக்கான செயலாளர் (பொறுப்பு) ஆடம் சுபின் கூறியதாவது:

பாகிஸ்தானின் சக்தி வாய்ந்த உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, அந்நாட்டிலிருந்து செயல்படும் அனைத்து தீவிரவாத அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க மறுத்து வருகிறது. குறிப்பாக சில அமைப்புகளை ஊக்குவித்து வருகிறது.

இந்த நிலைப்பாட்டை கைவிட்டுவிட்டு அனைத்துத் தீவிரவாத அமைப்புகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதற்கான உதவிகளை செய்யவும் தயாராக உள்ளோம்.

தீவிரவாதிகளுக்கு எதிராக போரிடவும் தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செல்வதைத் தடுக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். எனினும், தேவைப்பட்டால், தனியாகவே செயல்பட்டு அங்குள்ள தீவிரவாதக் குழுக்களை அழிக்கவும் தயங்க மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஹக்கானி அமைப்பு, ஆப்கானிஸ்தானில் தாக்குதலை நடத்தி வருகிறது. ஆனால், இந்த அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் தயங்கி வரும் நிலையில் அமெரிக்கா இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...