கோவையில் கடந்த சில தினங்களாக திருட்டுச் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் மர்ம நபர்களை பிடிப்பதில் காவல்துறையினர் திணரி வருகின்றனர்.
கோவை மாவட்டம், இருகூரை அடுத்த அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதாகர். தி இந்து தின நாளிதழில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று வார விடுமுறை என்பதால் தன் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். பின், திங்களன்று (இன்று) காலை அவர் வீட்டிற்கு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்துள்ளது. இதைத்தொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது

இதுகுறித்து, சிங்காநல்லூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் தடயங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவையில் கடந்த சில தினங்களில் இதேப்போன்று ஏராளமான திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.