மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாளில் காந்திபுரம் சாலை போக்குவரத்து நெருக்கடியை சரிசெய்ய வேண்டி சுயமரியாதை மாணவர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது; கோவை மாவட்டத்தில் காந்திபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து காந்திபுரத்தில் சக்தி ரோட்டில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருக்கும் ஆம்னி பேருந்து நிலையம் கோவை அவிநாசி சாலையில் உள்ள நீலாம்பூருக்கு மாற்ற மாநகராட்சி இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆம்னி பேருந்து நிலையம் இதுவரை அங்கு மாற்றப்படவில்லை. காந்திபுரம் மேம்பாலத்தின் இருபுறமும் பேருந்துக்கள் மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் அப்பகுதிகளில் அரசு பேருந்துக்கள் செல்வதற்கு கடினமாக உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் பெண்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல தாமதமாகிறது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் இந்த வழிச்சாலையை கடக்க பெரிதும் சிரமம்படுகின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் அவசரதிற்கு செல்ல முடியவில்லை. எனவே, மேம்பால பணிகள் முடியும் வரை ஆம்னி பேருந்துக்கள் இங்கு நிற்பதற்கு தடை செய்யவேண்டும். என்று ஆகஸ்ட் மாதம் மனு அளிக்கப்பட்டதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தற்போது அளித்துள்ள மனுவை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுயமரியாதை மாணவர்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது; கோவை மாவட்டத்தில் காந்திபுரம் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனையடுத்து காந்திபுரத்தில் சக்தி ரோட்டில் ஆம்னி பேருந்து நிலையம் செயல்பட்டு வருகிறது. மேம்பாலம் கட்டுமானப் பணிக்கு இடையூறாக இருக்கும் ஆம்னி பேருந்து நிலையம் கோவை அவிநாசி சாலையில் உள்ள நீலாம்பூருக்கு மாற்ற மாநகராட்சி இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆம்னி பேருந்து நிலையம் இதுவரை அங்கு மாற்றப்படவில்லை. காந்திபுரம் மேம்பாலத்தின் இருபுறமும் பேருந்துக்கள் மாலை 7 மணி முதல் இரவு 12 மணி வரை நிறுத்தப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. அதே நேரத்தில் அப்பகுதிகளில் அரசு பேருந்துக்கள் செல்வதற்கு கடினமாக உள்ளது.
மேலும், இரவு நேரங்களில் பணியை முடித்து விட்டு வீடு திரும்பும் பெண்கள் தங்கள் வீட்டிற்கு செல்ல தாமதமாகிறது. இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்கள் இந்த வழிச்சாலையை கடக்க பெரிதும் சிரமம்படுகின்றனர். மேலும், ஆம்புலன்ஸ் அவசரதிற்கு செல்ல முடியவில்லை. எனவே, மேம்பால பணிகள் முடியும் வரை ஆம்னி பேருந்துக்கள் இங்கு நிற்பதற்கு தடை செய்யவேண்டும். என்று ஆகஸ்ட் மாதம் மனு அளிக்கப்பட்டதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தற்போது அளித்துள்ள மனுவை ஏற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுயமரியாதை மாணவர்கள் இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.