கோவை மாநகராட்சியில் பட்டதாரி இளைஞர்களை துப்புரவு பணி செய்ய ஆணை பிறப்பித்துள்ள நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களுக்கு உரிய வேலை வழங்கக் கோரியும் தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.மார்க்ஸ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

அம்மனுவில் கூறியிருப்பதாவது:-
கோவை மாநகராட்சியில் துப்புறவுப் பணி செய்து பணிக்காலத்தில் காலமான துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கி வருவது நடைமுறையில் உள்ளது. அந்த வாரிசுதாரர்கள் எந்த படிப்பு படித்திருந்தாலும் அவர்களுக்கு துப்புறவுப் பணி மட்டுமேதான் வழங்கப்படுகிறது. இந்தச் செயல் துப்புறவுப் பணியாளர்களின் குழந்தைகள் என்னதான் படித்தாலும் அவர்கள் அருந்ததியராக பிறந்ததால் துப்புறவுப் பணிதான் செய்ய முடிவும் என்று சுட்டிக்காட்டுவதாக உள்ளது.
இந்தச் செயல் குலக்கல்வித் திட்டத்தை கோவை மாநகராட்சி பின்பற்றி வருவதாகக் கருதுகிறோம். இந்நிலையை மாற்றி கருணை அடிப்படையில் துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளை பணியில் சேர்க்கும் போது அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும்.
மேலும், ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் துப்புறவுப் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த அலுவலக வேலையினை ஒதுக்கித் தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.