துப்புறவு பணியாளர்களின் வாரிசுகளுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும்- தமிழ்புலிகள்


கோவை மாநகராட்சியில் பட்டதாரி இளைஞர்களை துப்புரவு பணி செய்ய ஆணை பிறப்பித்துள்ள நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், அவர்களுக்கு உரிய வேலை வழங்கக் கோரியும் தமிழ்புலிகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் வெ.மார்க்ஸ் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 



அம்மனுவில் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சியில் துப்புறவுப் பணி செய்து பணிக்காலத்தில் காலமான துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கி வருவது நடைமுறையில் உள்ளது. அந்த வாரிசுதாரர்கள் எந்த படிப்பு படித்திருந்தாலும் அவர்களுக்கு துப்புறவுப் பணி மட்டுமேதான் வழங்கப்படுகிறது. இந்தச் செயல் துப்புறவுப் பணியாளர்களின் குழந்தைகள் என்னதான் படித்தாலும் அவர்கள் அருந்ததியராக பிறந்ததால் துப்புறவுப் பணிதான் செய்ய முடிவும் என்று சுட்டிக்காட்டுவதாக உள்ளது. 

இந்தச் செயல் குலக்கல்வித் திட்டத்தை கோவை மாநகராட்சி பின்பற்றி வருவதாகக் கருதுகிறோம். இந்நிலையை மாற்றி கருணை அடிப்படையில் துப்புறவுப் பணியாளர்களின் வாரிசுகளை பணியில் சேர்க்கும் போது அவர்களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வேலை கொடுக்க வேண்டும். 

மேலும், ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள் துப்புறவுப் பணி செய்து வருகின்றனர். அவர்களுக்கு தகுந்த அலுவலக வேலையினை ஒதுக்கித் தர வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...