கோவை ராம்நகரில் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருண் என்ற வாலிபர் லோடு மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஞாயிறன்று அந்த நிறுவனத்தில் இருந்த 55 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போயுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராவில் சோதனையிட்டபோது அந்தப் பணத்தை அருண் திருடியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் மேலாளர் சாவித்ரி, காட்டூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து, அருணை கைது செய்த காவல் துறையினர் அவரிடம் இருந்த 55 ஆயிரம் ரூபாய் பணத்தை பரிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து, வழக்கு பதிந்து அவரை சிறையில் அடைத்தனர்.