கோவை கே.கே.புதூர் பகுதியைச் சேர்ந்தவர் வீராசாமி (86). இவர் கடந்த 19ம் தேதியன்று செங்கோட்டையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக சென்றுள்ளார். இந்நிலையில், 22ம் தேதியன்று காலை கோவையில் உள்ள அவரது வீட்டின் கதவு திறந்துகிடப்பதாக அக்கம் பக்கத்தினர் வீராசாமிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கோவைக்கு விரைந்த வீராசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 15 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது.
இதுகுறித்து, உடனடியாக சாய்பாபா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, கோவைக்கு விரைந்த வீராசாமி, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, அங்கிருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 15 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்துள்ளது
இதுகுறித்து, உடனடியாக சாய்பாபா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.