கோவை, இடிகரை புதுப்பாளையம் அருகே 7 வீடுகளில் பொதுமக்கள் மின்சாரவசதி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் அந்த கிராம மக்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் தங்கள் பகுதியில் மின்சாரவசதி வழங்கக்கோரி மனு கொடுத்தனர்.