குவெட்டா: பலூசிஸ்தான் தலைநகர் குவெட்டாவில் உள்ள போலீஸ் பயிற்சி முகாமில் புகுந்த தீவிரவாதிகள், கண்மூடித்தனமாக சுட்டதில் 44 பயிற்சி போலீசார் உயிரிழந்தனர். மேலும் இந்த தாக்குதலில் காயம் அடைந்த 118 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்தியது லக்ஷர் இ ஜவாங்கி அமைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். போலீஸ் பயிற்சி முகாமில் தாக்குதல் நடத்தியது லக்ஷர் இ ஜவாங்கி அமைப்பு என தகவல் வெளியாகியுள்ளது.