205.5 மில்லியன் டாலர் அபராதமாக செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் முடிவு

சாவ் பாவ்லோ: இந்தியா உள்ளிட்ட 4 நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்ய ஒப்பந்தங்களைப் பெற லஞ்சம் வழங்கியதாக குற்றம்சாட்டப்பட்ட பிரேசிலின் எம்ப்ரேயர் நிறுவனம் 205.5 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,379 கோடியை) அபராதமாக செலுத்த முடிவு செய்துள்ளது.

லஞ்சம்:

பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் நிறுவனம் இந்தியா, டோம்னிக் குடியரசு, சவூதி அரேபியா, மொசாம்பிக் ஆகிய நாடுகளுக்கு விமானங்களை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தங்களைப் பெற, கோடிக்கணக்கான ரூபாயை லஞ்சமாக வழங்கியதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை அமெரிக்க கோர்ட் (எஸ்.இ.சி.,) விசாரித்து வருகிறது.

விற்பனை:

இந்தியாவுடன் 3 விமானங்களை வாங்குவதற்காக கடந்த 2008ம் ஆண்டு எம்பயர் நிறுவனம் ஒப்பந்தம் செய்தது.

ரூ.1,391 கோடி மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தைப் பெற இந்திய தரப்புக்கு ரூ.36 கோடி லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு உள்ளது. மேலும் டோம்னிக் குடியரசு (8 விமானங்கள்), சவூதி அரேபியா (3 விமானங்கள்), மொசாம்பிக்(2 விமானங்கள்) விற்பனை செய்ததாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டு சுமார் ரூ.555 கோடி லாபம் அடைந்ததாகவும் எஸ்.இ.சி., சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அபராதம்:

இந்நிலையில் எம்ப்ரேயர் நிறுவனத்துக்கு 205.5 மில்லியன் டாலர் அபராதத்தை எஸ்.இ.சி., விதித்தது. இந்த அபராதத் தொகையை செலுத்த எம்ப்ரேயர் நிறுவனம் ஒப்புக்கொண்டதாக எஸ்.இ.சி. தெரிவித்துள்ளது.

எம்பயர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில், இந்தியாவில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...