சென்னை: லண்டன் டாக்டர் ரிச்சர்ட் ஜான் பீலே, நேற்று முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்தார்.
அவர், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் சென்னை வந்தார். அதேபோல் டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை, நுரையீரல் நிபுணர் டாக்டர் கில்நானியும், சென்னை வந்தார். இருவரும், நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து, நேற்று மருத்துவமனை சார்பில், அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
வேகமாக குணமடைந்து வருகிறார்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான, நடிகை குஷ்பு, பகல், 12:45 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை வந்தார். அமைச்சர்களை சந்தித்து, முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, 'ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்; விரைவில் வீடு திரும்புவார்' என்றார்.
அவர், நேற்று முன்தினம் இரவு, மீண்டும் சென்னை வந்தார். அதேபோல் டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனை, நுரையீரல் நிபுணர் டாக்டர் கில்நானியும், சென்னை வந்தார். இருவரும், நேற்று காலை அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர். முதல்வர் உடல்நிலை குறித்து, நேற்று மருத்துவமனை சார்பில், அறிக்கை எதுவும் வெளியாகவில்லை.
வேகமாக குணமடைந்து வருகிறார்
காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான, நடிகை குஷ்பு, பகல், 12:45 மணிக்கு, அப்பல்லோ மருத்துவமனை வந்தார். அமைச்சர்களை சந்தித்து, முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்தார். பத்திரிகையாளர்களிடம் பேசும் போது, 'ஜெயலலிதா வேகமாக குணமடைந்து வருகிறார்; விரைவில் வீடு திரும்புவார்' என்றார்.