கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தனியார் வர்த்தக நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில், ராமகிருஷ்ணன் என்பவர் மேலாளராக செயல்பட்டு வருகிறார். ராஜேஷ் என்பவர் ஊழியராக உள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து அந்த நிறுவனத்தை பிரபலப்படுத்துவதற்காக விளம்பரங்கள் செய்வதாகக் கூறி நிறுவனத்தில் இருந்து 35 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயினை மோசடி செய்துள்ளனர்.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தில் கணக்காளர் நாராயணன் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அதில், இந்த மோசடியில் மேலும் 3 பேருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, சாவித்ரி, ஆனந்தகுமார், உஷ்மன் செரிப் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தொடர்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.