கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த மாதம் 22-ஆம் தேதியன்று மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது இறுதி ஊர்வலத்தின் போது கோவை மாவட்டம் முழுவதும் வன்முறை சம்பவங்கள் ஏற்பட்டன. அப்போது, பேருந்துகள், பொதுமக்களின் வாகனம், காவல்துறை வாகனம் மற்றும் பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன.
இதைத்தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக 800-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், பலரின் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து வருகிறது.
இந்நிலையில், சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தங்களது மகனை விடுவிக்கக் கோரி 5 பேரின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

துடியலூரைச் சேர்ந்த குனசேகரன், ரத்தினம் தம்பதியினர் அளித்த மனுவில், ''தங்களது மகன் மணிவண்ணன். கூலி வேலை செய்து வருகிறான். கடந்த மாதம் 26ம் தேதியன்று வன்முறையில் ஈடுபட்டதாக் கூறி காவல் துறையினர் அவனை கைது செய்தனர். இன்றுவரை வெளியில் விடவில்லை. தங்களது மகனை உடனடியாக விடுதலை செய்து, உன்மையான குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும்'' என ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, கலவரத்தில் ஈடுபட்டதாக 800-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். இதில், பலரின் மீது குண்டர் சட்டமும் பாய்ந்து வருகிறது.
இந்நிலையில், சசிக்குமாரின் இறுதி ஊர்வலத்தில் வன்முறையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தங்களது மகனை விடுவிக்கக் கோரி 5 பேரின் பெற்றோர்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

துடியலூரைச் சேர்ந்த குனசேகரன், ரத்தினம் தம்பதியினர் அளித்த மனுவில், ''தங்களது மகன் மணிவண்ணன். கூலி வேலை செய்து வருகிறான். கடந்த மாதம் 26ம் தேதியன்று வன்முறையில் ஈடுபட்டதாக் கூறி காவல் துறையினர் அவனை கைது செய்தனர். இன்றுவரை வெளியில் விடவில்லை. தங்களது மகனை உடனடியாக விடுதலை செய்து, உன்மையான குற்றவாளியை காவல் துறையினர் கைது செய்ய வேண்டும்'' என ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர்.