கோவை மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் துப்புரவு, குடிநீர் விநியோகம், பள்ளி துப்புரவு பணி மற்றும் வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள் என ஆண்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்து வருகிறார்கள் இவர்களுக்கான அடிப்படை கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு இப்பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து சிஐடியூ மாவட்ட பொது செயலாளர் ரத்தன் குமார் கூறுகையில்:-
துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களது பணியினை நிரந்தரபடுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு குடியிருப்பு அமைத்திடவும், மாவட்ட வளர்ச்சிக்கேற்ப ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பணியிடங்களளை வழங்கிடவும், தினக்கூலி ஒப்பந்த காரர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து சிஐடியூ மாவட்ட பொது செயலாளர் ரத்தன் குமார் கூறுகையில்:-
துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களது பணியினை நிரந்தரபடுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு குடியிருப்பு அமைத்திடவும், மாவட்ட வளர்ச்சிக்கேற்ப ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பணியிடங்களளை வழங்கிடவும், தினக்கூலி ஒப்பந்த காரர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.