சர்க்கரை, பருப்பு, பலகாரமில்லாமல் தீபாவளிக் கொண்டாட்டம்- மாதர் சங்கம் நூதனப் போராட்டம்

தமிழக மக்கள் சர்க்கரையின்றி, பருப்பின்றி, பலகாரமின்றி பச்சைத் தண்ணியில் தீபாவளி கொண்டாட உள்ளனர் என மாதர் சங்கத்தினர் நூதனமுறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



ரேசன் கடைகளில் பருப்பு, சர்க்கரை, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. உள்ளூர் மக்களின் தேவையை சிறிதும் நினைக்காமல் மத்திய அரசு அதிகளவில் வெளிநாடுகளுக்கு இத்தகையப் பொருட்களை ஏற்றுமதி செய்ததே இதற்குக் காரணம். மேலும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் உடல் நலக் குறைவின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்காலிக முதல்வர் பொறுப்பில் உள்ள பன்னீர்செல்வமும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தாமல் செயல்பட்டு வருகிறார்.

உடனடியாக அமைச்சரவை கூடி தீபாவளிக்கு முன்பு ரேசன் கடைகளில் பொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், வெறும் நீரில் தான் இந்த தீபாவளியை கொண்டாட நேரிடும் என மாதர் சங்க மாநில துணைத் தலைவர் அமிர்தம் தலைமையில் மாதர் சங்கத்தினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காந்திபுரம், காட்டூர் பகுதியில் உள்ள அனைத்திந்திய இளைஞர் பெறுமன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இதில், கோவை மாவட்ட மாதர் சங்க தலைவர் அமுதா, செயலாளர் ராதிகா, பொருளாளர் ஜோதிமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...