கோவை, கணபதி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி வள்ளியம்மை (61). இவர்கள் திங்களன்று வீட்டின் வெளியில் நின்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் இவர்களிடம் முகவரி ஒன்றைக் காட்டி வழி கேட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து, தம்பதியினர் வழியினைக் கூறிக்கொண்டிருந்த நிலையில், அந்த நபர்கள் வள்ளியம்மையின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து பல்லடம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததைத்தொடர்ந்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில், கடந்த சில தினங்களாகவே வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பது, நகை பறிப்பது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.