கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (இன்று) ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் லிஸ்டர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசியதாவது:-
''கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தினை அவர்களது வங்கிக் கணக்கு மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ நிதி உள்ளிட்ட காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தூய்மை தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ முகாம்களும் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பணிகளில் தொழிலாளர்களை பயன்படுத்துவோர், தொழிலாளர் நலனுக்கு எதிராக சிறுவர்களை பணியமர்த்தவோ, கொத்தடிமைகளாக வைத்திருப்பதோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செயல்படுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
''கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தினை அவர்களது வங்கிக் கணக்கு மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ நிதி உள்ளிட்ட காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தூய்மை தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ முகாம்களும் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், பணிகளில் தொழிலாளர்களை பயன்படுத்துவோர், தொழிலாளர் நலனுக்கு எதிராக சிறுவர்களை பணியமர்த்தவோ, கொத்தடிமைகளாக வைத்திருப்பதோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செயல்படுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாவட்ட ஆட்சியர் பேசினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.