ஆட்சியர் தலைமையில் ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாயன்று (இன்று) ஆதிதிராவிடர் நலக்குழுக் கூட்டம் நடைபெற்றது. தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் முதுநிலை கண்காணிப்பாளர் லிஸ்டர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் பேசியதாவது:-

''கோவை மாநகராட்சியின் சார்பில் ஒப்பந்த தொழிலாளர்களின் ஊதியத்தினை அவர்களது வங்கிக் கணக்கு மூலம் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி, மருத்துவ நிதி உள்ளிட்ட காப்பீடு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தூய்மை தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ முகாம்களும் அதிகளவில் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பணிகளில் தொழிலாளர்களை பயன்படுத்துவோர், தொழிலாளர் நலனுக்கு எதிராக சிறுவர்களை பணியமர்த்தவோ, கொத்தடிமைகளாக வைத்திருப்பதோ சட்டப்படி குற்றமாகும். அவ்வாறு செயல்படுபவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என மாவட்ட ஆட்சியர் பேசினார்.



இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கிருஷ்துராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மோகன், ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினர் செல்வக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...