பரப்பன அக்ரஹாராவா, பட்டாசுடன் கொண்டாட்டமா... எதியூரப்பா மீதான லஞ்ச வழக்கில் இன்று தீர்ப்பு!

பெங்களூரு: முன்னாள் கர்நாடக முதல்வர் எதியூரப்பா மீதான லஞ்ச வழக்கில் இன்று சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது. இது எதியூரப்பாவின் தலைவிதியை மாற்றி எழுதும் என்பதால் எதியூரப்பா ஆதரவாளர்களும், பாஜகவினரும் பெரும் பதைபதைப்புடன் உள்ளனர்.

கர்நாடக முதல்வராக எதியூரப்பா இருந்தபோது தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்து, தனது இரு மகன்கள், மருமகன் உள்ளிட்ட மேலும் சிலருக்கு சாதகமாக நடந்து கொண்டார் என்பது குற்றச்சாட்டாகும். இதுதொடர்பாக கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி, எதியூரப்பா, இரு மகன்கள், மருமகன், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம், பெல்லாரியைச் சேர்ந்த அதன் நான்கு துணை நிறுவனங்கள் மீது குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது சிபிஐ.

குற்றச்சாட்டு - எதியூரப்பாவின் மகன்கள் ராகவேந்திரா, விஜேந்திரா மற்றும் மருமகன் சோஹன் குமார் ஆகியோரின் வங்கிக் கணக்குகளில் ரூ. 20 கோடி பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்தப் பணமானது 2010ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் செப்டம்பர் மாத இடைவெளியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

இதுபோக எதியூரப்பாவின் மகன்கள் நடத்தி வரும் பிரேர்னா கல்வி அறக்கட்டளைக்கும் ரூ. 20 கோடி நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ. 40 கோடி பணமும், சுரங்க ஒப்பந்த அனுமதி தருவதற்காக எதியூரப்பாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கொடுத்த லஞ்சப் பணமாகும்.

இந்தப் பணத்தை ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்தின் துணை நிறுவனமான செளத் வெஸ்ட் மைனிங் நிறுவனம் வழங்கியுள்ளது. இதுதவிர பெங்களூரு அருகே உள்ள ஒரு ஏக்கர் அரசு நிலத்தை எதியூரப்பாவும், அவரது குடும்பத்தினரும், ஜேஎஸ்டபிள்யூ நிறுவனத்திற்கும் அவர்களது துணை நிறுவனங்களுக்கும் ரூ 20 கோடிக்கு விற்றதாக கணக்குக் காட்டியுள்ளனர். இது ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் எதியூரப்பா குடும்பத்திற்குக் கொடுத்த லஞ்சத்தை மூடி மறைக்க நடந்ததாகும். உண்மையில் இந்த நிலப் பரிவர்த்தனை சட்டவிரோதமாக நடந்துள்ளது. எதியூரப்பா தனது முதல்வர் பதவிக்கான அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்று சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்புவெளியாகியுள்ளது. இதில் தண்டிக்கப்பட்டால் எதியூரப்பாவின் அரசியல் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகும். ஏற்கனவே பரப்பன அக்ரஹாரா சிறைக்குப் போய் திரும்பிய எதியூரப்பா மீண்டும் சிறைக்குப் போவாரா அல்லது தப்புவாரா என்பது இன்றைய தீர்ப்பில் தெரியவரும்.

Newsletter

திருப்பூரில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 50 வயது கட்டிட தொழிலாளிக்கு திருப்பூர் மாவட்ட ம...

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதிகாலை வரை நடந்த சோதனையில் இது வெறும் வதந்தி...

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜி.கே.என்.எம் மருத்துவமனை கட்டிடம் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளியூட்டம்

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம் மருத்துவமனை, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தனது புறநோயாளி மையத்தை இளஞ்சிவப்பு நி...

தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் ஈசா கல்லூரி மாணவர் முதலிடம்

கோவை ஈசா பொறியியல் கல்லூரி மாணவர் ஜி. சந்தபாண்டி, தமிழக அரசு நடத்திய தமிழ் மொழி வளர்ச்சிக்கான பேச்சுப் போட்டியில் முதல்...

திருப்பூர்: காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலைய அமைப்புக்கு எதிர்ப்பு - விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் மாவட்டம் காவுத்தம்பாளையத்தில் துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100-க்கும் மேற்பட்ட விவசாயி...

கோவை அரசு மருத்துவமனைக்கு ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பேட்டரி வாகனம் வழங்கியது

கோவை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு உணவு மற்றும் மருந்துகளை விநியோகிக்க ஸ்ரீதேவி சில்க்ஸ் நிறுவனம் பிரத்யேக பேட்டரி...