கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எண் 4, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் எண் 5 ஆகிய இரு நீதிமன்றங்கள் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. இதனை புதனன்று மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஏற்கனவே 3 உரிமையியல் நீதிமன்றங்கள் செயல்பட்டு வந்தன. இதில், சுமார் 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால் வழக்குகளை விரைந்து முடிப்பதற்காகவே இந்த மாவட்ட உரிமையியல் நீதி மன்றம் 4 மற்றும் 5 திறக்கப்பட்டுள்ளது என மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி பொங்கியப்பன் தெரிவித்தார்.
